விடுவிக்கப்பட்ட 18 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்

by Staff Writer 27-11-2021 | 8:40 PM
Colombo (News 1st) அண்மையில் விடுவிக்கப்பட்ட 23 இந்திய மீனவர்களில் 18 மீனவர்கள் இன்று (27) தாயகம் திரும்பினர். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்கள் கடந்த மாதம் 13 ஆம் திகதி பருத்தித்துறை - பலாலி கடற்பரப்புகளில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பருத்தித்துறை நீதவானால் கடந்த 15 ஆம் திகதி விடுவிக்கப்பட்டனர். 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கால சிறைத்தண்டனை எனும் நிபந்தனையின் கீழ் 23 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். கொரோனா பரிசோதனைகளின் பின்னர், இருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 18 பேர் இன்று தாயகம் திரும்பியதாக தமிழக செய்தியாளர் தெரிவித்தார். ஏனைய மூவரும் எதிர்வரும் நாட்களில் நாடு திரும்பவுள்ளனர்.

ஏனைய செய்திகள்