சிலிண்டர்கள் வெடிப்பது குறித்து உடனடியாக விசாரிக்குமாறு CID-இல் முறைப்பாடு

by Staff Writer 27-11-2021 | 2:34 PM
Colombo (News 1st) எரிவாயு சிலிண்டர் விபத்துகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என ஐக்கிய தேசிய சுயதொழில் சம்மேளனத்தினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொள்ளளவை 18 லிட்டராக குறைக்கும் போதே, 407 ரூபா வரை மோசடி இடம்பெறுவதாக தாம் குற்றஞ்சுமத்தியதாக ஐக்கிய தேசிய சுயதொழில் வியாபாரிகள் சங்க தலைவர் பிரதீப் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மோசடி இடம்பெறுவதாக அறிந்ததாலேயே இது குறித்து இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறையிட்டதாக அவர் கூறினார்.