ஏறாவூரில் ஆணின் சடலம் மீட்பு

ஏறாவூரில் ஆணின் சடலம் மீட்பு

by Staff Writer 27-11-2021 | 2:58 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - ஏறாவூர், தளவாய் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தளவாயிலுள்ள மணல் சுத்திகரிப்பு பண்ணையிலுள்ள நீர் வடிந்தோடும் இயற்கை தோணாவினுள் இருந்தே நேற்று பின்னிரவு சடலம் மீட்கப்பட்டது. கூலித்தொழிலில் ஈடுபடும் செங்கலடி - கித்துள் பகுதியை சேர்ந்த 07 பிள்ளைகளின் தந்தை ஒருவரே தோணாவினுள் மூழ்கி உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.