புத்தளத்தில் யானையை புதைத்தவர் கைது

புத்தளத்தில் யானையை புதைத்தவர் கைது

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2021 | 8:51 pm

Colombo (News 1st) புத்தளத்தில் மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்த யானையை புதைத்த குற்றச்சாட்டில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் – கல்லடி 6 ஆம் கட்டை பகுதியில் உயிரிழந்த யானையை குழி தோண்டி புதைத்த குற்றச்சாட்டில் குறித்த நபர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய தேடுதல் நடவடிக்கையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை (24) மின்சார வேலியில் சிக்குண்டு குறித்த காட்டு யானை உயிரிழந்த நிலையில், அதனை குழி தோண்டி புதைத்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு பெரிய தந்தங்களைக் கொண்ட இந்த யானையின் உடல் இன்று தோண்டி எடுக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்