வீடு சேதமாக்கப்பட்டமை தொடர்பில் இருவர் கைது

யாழ். உடுவிலில் வீடு சேதமாக்கப்பட்டமை தொடர்பில் இருவர் கைது

by Staff Writer 25-11-2021 | 10:34 AM
Colombo (News 1st) யாழ். உடுவில் - அம்பலவாணர் வீதியிலுள்ள வீடொன்று கடந்த 19 ஆம் திகதி சேதமாக்கப்பட்டமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் பகுதியை சேர்ந்த இரண்டு பேர் நேற்று (24) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை மல்லாகம் நீதவான் முன்னிலையில் இன்று (25) ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ். உடுவில் - அம்பலவாணர் வீதியிலுள்ள குறித்த வீட்டிலிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. வௌிநாட்டில் வசிக்கும் ஒருவரால் பணம் வழங்கப்பட்டு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.