வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதாக இருவர் கைது

யாழ். அம்பலவாணர் வீதியிலுள்ள வீட்டின் மீது தாக்குதல்: இருவர் கைது

by Staff Writer 25-11-2021 | 6:58 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - உடுவில், அம்பலவாணர் வீதியிலுள்ள வீடொன்றின் மீது கடந்த 19 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் பகுதியை சேர்ந்த இரண்டு பேர் நேற்று (24) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை மல்லாகம் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் கூறினர். அம்பலவாணர் வீதியிலுள்ள வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பல இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. வௌிநாட்டில் வசிக்கும் ஒருவரால் பணம் வழங்கப்பட்டு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.