காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

by Staff Writer 25-11-2021 | 12:28 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு - மன்னாகண்டல் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு கெருடமடு மன்னாகண்டலை சேர்ந்த 65 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர். குளத்தில் மீன்பிடிக்கச் சென்று திரும்பிய போது நேற்றிரவு (24) யானை தாக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.