ஆங்கிலக் கால்வாயில் படகு கவிழ்ந்தது; 31 பேர் பலி

ஆங்கிலக் கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்து; 31 பேர் பலி

by Bella Dalima 25-11-2021 | 4:36 PM
Colombo (News 1st) ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்காக பிரான்ஸ் - இங்கிலாந்து கடற்பரப்பில் பயணம் செய்தபோது படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பெண்கள் உட்பட 31 பேர் பலியாகியுள்ளனர். அட்லாண்டிக் பெருங்கடலில் பிரான்ஸ் - இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே உள்ள ஆங்கிலக் கால்வாய் வழியாக சென்றுகொண்டிருந்த படகு நேற்று (24) இரவு கவிழ்ந்தது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 31 அகதிகள் நீரில் மூழ்கி பலியாகியிருப்பதாகவும் 2 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காணாமற்போனவர்களை மீட்கும் நடவடிக்கையில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.