by Staff Writer 25-11-2021 | 7:08 PM
Colombo (News 1st) கிண்ணியா - குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட கிண்ணியா நகர சபை தலைவர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்ததரவு வழங்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட படகு உரிமையாளர் உள்ளிட்ட மூவரும் டிசம்பர் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடற்படையினரால் குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கான படகு சேவை நாளை (26) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் இந்திக்க டி சில்வா கூறினார்.
இதற்கான இறங்குதுறையை நிர்மாணிக்கும் பணிகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. பரீட்சார்த்த படகு சேவையும் இன்று இடம்பெற்றது.