by Staff Writer 25-11-2021 | 6:43 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 63 சந்தேகநபர்களின் விளக்கமறியல் உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் இன்று (25) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வருத் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று மன்றில் ஆஜர்படுத்தப்படவில்லை என்பதுடன், Zoom தொழில்நுட்பத்தினூடாக நீதவான் சந்தேநபர்களை பார்வையிட்டுள்ளார்.