நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

by Staff Writer 24-11-2021 | 7:05 AM
Colombo (News 1st) வடக்கு, கிழக்கு, வட மத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (24) 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை தாழமுக்க பிரதேசமாக விருத்தியடைவதே இதற்கு காரணமாகும். இதனிடையே, நாட்டின் ஏனைய பிரசேங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் வானம் முகில் சூழ்ந்து காணப்படும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.