கம்பளையில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் மீட்பு

by Staff Writer 24-11-2021 | 4:56 PM
Colombo (News 1st) கம்பளையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கம்பளை - கல்வெல வீதி, உனம்புவ பிரதேசத்தில் கட்டிடம் ஒன்றுக்கு அருகில் குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. 34 வயதான அதே பிரதேசத்தை சேர்ந்த ஆண் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மீதான பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சடலம் மீதான விசாரணைகளை கம்பளை போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.