மே - 18 நினைவேந்தல்; வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

மே - 18 நினைவேந்தல் நிகழ்வு தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

by Staff Writer 23-11-2021 | 7:29 AM
Colombo (News 1st) மட்டக்களப்பு - கிரான் பகுதியில் இடம்பெற்ற மே - 18 நினைவேந்தல் நிகழ்வு தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு - வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம். பசீல் முன்னிலையில் இது தொடர்பான வழக்கு ​நேற்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் வரை சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளர் தெரிவித்தார். மட்டக்களப்பு - கிரான் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கல்குடா பொலிஸாரினால் கடந்த மே மாதம் 18 ஆம் திகதி இரண்டு பெண்கள் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் எவரும் நேற்று (22) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவில்லை என நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை ஒத்திவைத்து வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.