விதுசனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வௌியான தகவல்

இருதயபுரம் இளைஞர் விதுசனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வௌியான தகவல்

by Staff Writer 23-11-2021 | 8:32 AM
Colombo (News 1st) மட்டக்களப்பு - இருதயபுரம் கிழக்கு பகுதியில் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் உயிரிழந்த 22 வயதான இளைஞரின் வழக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வீட்டில் போதைப்பொருள் வைத்திருந்ததாக தெரிவித்து கடந்த ஜுன் மாதம் 03ஆம் திகதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருந்த குறித்த இளைஞர், பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்திருந்தார். குறித்த வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் நேற்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை நேற்று (22) நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஏனைய செய்திகள்