English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
23 Nov, 2021 | 5:31 pm
Colombo (News 1st) மாவீரர் தின நினைவேந்தலுக்கு தடை விதிக்குமாறு கோரி பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பங்களை யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் இன்று (23) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் 6 தனிநபர்களுக்கு எதிராகவும் மாவீரர் தின நினைவேந்தலுக்கு தடை விதிக்குமாறும் கோரி ஊர்காவற்துறை மற்றும் நெடுந்தீவு பொலிஸாரால் விண்ணப்பிக்கப்பட்டது.
ஊர்காவற்துறை பொலிஸாரால் 5 தனிநபர்களுக்கு எதிராகவும் நெடுந்தீவு பொலிஸாரால் ஒருவருக்கு எதிராகவும் தடை உத்தரவை கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்த நீதவான், இரண்டு விண்ணப்பங்களையும் தள்ளுபடி செய்துள்ளார்.
பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி N.ஸ்ரீகாந்தா, கனகரட்ணம் சுகாஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகி , பொலிஸாரால் கோரப்பட்டதற்கு அமைய தடை உத்தரவை பிறப்பிக்கக்கூடாதென வாதிட்டனர்.
18 May, 2022 | 08:10 PM
11 Feb, 2022 | 07:50 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS