மூவரது கட்சி உறுப்புரிமை இடை நிறுத்தம்

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரது கட்சி உறுப்புரிமை இடை நிறுத்தம்

by Staff Writer 22-11-2021 | 10:35 PM
Colombo (News 1st) கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரது கட்சி உறுப்புரிமை இடை நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம் மற்றும் முஷாரப் முதுநபீன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அதிகார சபை இன்று (22) தீர்மானித்துள்ளது. இவர்கள் மூவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்