மந்திகை மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி

வடமராட்சி - மந்திகையில் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்; இளைஞர் உயிரிழப்பு

by Staff Writer 22-11-2021 | 4:34 PM
Colombo (News 1st) வடமராட்சி - மந்திகை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மந்திகையில் நேற்று (21) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளார். நேருக்கு நேர் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள அதேநேரம், இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.