மத்திய வங்கி நிதிச்சபைக்கு 04 புதிய உதவி ஆளுநர்கள்

மத்திய வங்கி நிதிச்சபைக்கு 04 புதிய உதவி ஆளுநர்கள் நியமனம் 

by Staff Writer 21-11-2021 | 4:26 PM
Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு புதிதாக 04 உதவி ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 17 ஆம் திகதி நடைபெற்ற நிதிச் சபை கூட்டத்தின் போது இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது. அதனடிப்படையில், K.J.P.சிறிகுமார, D.குமாரதுங்க, U.L.முத்துகல மற்றும் C.P.S.பண்டார ஆகியோர் உதவி ஆளுநர்களாக பதவியுர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.