by Staff Writer 21-11-2021 | 8:31 PM
Colombo (News 1st) வௌிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவினால் வழங்கப்படும் சேவைகள் நாளை (22) முதல் மட்டுப்படுத்தப்படவுள்ளன.
அதற்கமைய, நாளை முதல் நாளந்தம் வருகை தரும் 150 வாடிக்கையாளர்களுக்கு மாத்திரமே கொன்சியூலர் விவகார பிரிவினால் சேவைகள் வழங்கப்படும் என வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கணினி பராமரிப்பு சார்ந்த பணிகள் நிறைவடைந்தவுடன், புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
இது குறித்த மேலதிக தகவல்களை 011 - 2338812 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அறிந்து கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.