எவரும் வாகன தொடரணியை பயன்படுத்துவதில்லை

ஜனாதிபதி குறைந்த வள பயன்பாட்டுடன் பாரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக  அறிக்கை

by Staff Writer 20-11-2021 | 7:15 PM
Colombo (News 1st) கடந்த இரண்டு வருட ஆட்சிக் காலத்தில் பல்வேறு சவால்களின் மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறைந்த வள பயன்பாட்டுடன் பாரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரியும் எந்தவொரு அதிகாரியும் வாகன தொடரணியை பயன்படுத்துவதில்லையென ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தமது பதவிக்குரிய வாகனத்தைக் கூட பயன்படுத்தாது, கடமைக்கு ஏற்ற வகையில் பட்டியலில் உள்ள வாகனங்களை பயன்படுத்துவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.