கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி இளைஞர் பலி

கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி இளைஞர் பலி

by Staff Writer 20-11-2021 | 2:01 PM
Colombo (News 1st) மொறட்டுவை - கொழும்பு ரயில் மார்க்கத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரத்தினபுரி - நிவித்திகல பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார். சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குருநாகல் பொல்கஹவெல பகுதியில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். அலவ்வ - பொல்கஹவெல ரயில் மார்க்கத்தில் கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் ஆளடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை. சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொல்கஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.