மேலும் 22 கொரோனா மரணங்கள் உறுதி

மேலும் 22 கொரோனா மரணங்கள் உறுதி; இதுவரை 14,108 பேர் உயிரிழப்பு

by Staff Writer 20-11-2021 | 2:49 PM
Colombo (News 1st) மேலும் 22 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நவம்பர் 19 ஆம் திகதி இந்த அனைத்து மரணங்களும் பதிவாகியுள்ளமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 13ஆண்களும் 9 பெண்களும் அடங்குகின்றனர். அதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,108 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5, 26,353 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை 5, 55, 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்