துப்பாக்கி தயாரிக்கும் நிலையம் சுற்றிவளைப்பு

வவுனியாவில் துப்பாக்கி தயாரிக்கும் நிலையம் சுற்றிவளைப்பு; நால்வர் கைது

by Staff Writer 19-11-2021 | 1:57 PM
Colombo (News 1st) வவுனியா - பறையனாளங்குளம், மெனிக்பாம் பகுதியில் துப்பாக்கி தயாரிக்கப்படும் நிலையமொன்றை சுற்றிவளைத்ததில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். செட்டிக்குளம் பகுதியை சேர்ந்த 25, 28, 30 மற்றும் 32 வயதான நால்வரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கி தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் 02 இரும்பு குழாய்கள், துப்பாக்கியின் ஒரு பகுதி மற்றும் துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்படும் மரக்கட்டைகள் என்பனவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேகநபர்களை இன்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.