மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

பொகவந்தலாவையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

by Staff Writer 18-11-2021 | 12:56 PM
Colombo (News 1st) திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திம்பிரிகொல்லேவ - பக்மிட்டியாவ வனப்பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்து தொல்பொருட்களை தேடும் நோக்கில் அகழ்வில் ஈடுட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் அகழ்வுக்குப் பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த 32 மற்றும் 58 வயதுக்கு இடைப்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் பொகவந்தலாவையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவையைச் சேர்ந்த 25 மற்றும் 31 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 23 ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பொகவந்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.