Epic Lanka உதவி மென்பொருள் பொறியியலாளருக்கு பிணை

NMRA தரவுகள் அழிப்பு: Epic Lanka-வின் உதவி மென்பொருள் பொறியியலாளருக்கு நிபந்தனைகளுடன் பிணை

by Staff Writer 17-11-2021 | 3:02 PM
Colombo (News 1st) தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் (NMRA) தரவுகள் அழிக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த Epic Lanka Technologies (Pvt) Ltd நிறுவனத்தின் உதவி மென்பொருள் பொறியியலாளர் பிரமோத திலுப ராமநாயக்கவிற்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதம நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் வழக்கு இன்று (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிணை வழங்கப்பட்டுள்ளது. வௌிநாடு செல்வதை தடுத்து உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபரின் கடவுச்சீட்டை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் 50,000 ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும் செல்ல சந்தேகநபருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.