23 இந்திய மீனவர்களும் விடுதலை

23 இந்திய மீனவர்களும் விடுதலை

by Staff Writer 16-11-2021 | 7:45 AM
Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 23 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் இந்திய மீனவர்கள் நேற்று (15) விடுதலை செய்யப்பட்டனர். 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கால சிறைத்தண்டனை எனும் நிபந்தனையின் கீழ் 23 இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார். எனினும், மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகு உள்ளிட்ட அனைத்து கடற்றொழில் உபகரணங்களையும் அரசுடைமையாக்குமாறு பருத்தித்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கடந்த 13 ஆம் திகதி இரவு கடற்படையினரால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். பருத்தித்துறை, பலாலி கடற்பரப்புகளில் 02 படகுகளுடன் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.