மன்னார் மாவட்ட கொரோனா நிலைமை

by Staff Writer 16-11-2021 | 1:55 PM
Colombo (News 1st) மன்னார் மாவட்டத்தின் கொரோனா நிலைமை,டெங்கு கட்டுப்பாடு மற்றும் அண்மையில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் தொடர்பாக நேற்றைய (15) கூட்டத்தில் ஆராயப்பட்டது. போக்குவரத்தின் போது பயணிகள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றும் வகையில் சேவையினை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபரினால் பணிப்புரை விடுக்கப்பட்டது. மீண்டும் சகல சுகாதார நடைமுறைகளையும் மிகவும் கடுமையாக நடைமுறைப்படுத்த  தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நியூஸ்பெஸ்ட் தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் இராணுவத்தினர், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரதேச செயலாளர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.