ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி கொழும்பில் ஆரம்பம் 

ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி கொழும்பில் ஆரம்பம் 

by Staff Writer 16-11-2021 | 2:27 PM
Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள 'சாபக்கேடான அரசாங்கத்திற்கு எதிரான பேரணி' கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. உர தட்டுப்பாடு, விவசாயிகளின் பிரச்சினை, சீமெந்து, சமையல் எரிவாயு தட்டுப்பாட்டினால் நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்களை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. முன்னதாக, எதிர்க்கட்சியின் இந்த எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க கொழும்பிற்கு வருகை தருவோருக்கு பொலிஸாரால் இடையூறு ஏற்படுத்தப்பட்டது.