திட்டமிட்டவாறு நாளை (16) எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் - ஐக்கிய மக்கள் சக்தி

by Staff Writer 15-11-2021 | 1:53 PM
Colombo (News 1st) திட்டமிடப்பட்டவாறு நாளைய தினம் (16) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஏராளமான பொதுமக்கள் கொழும்பிற்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டம் இரத்து செய்யப்படாது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார். அரசாங்கத்தின் ஒடுக்கமுறை முயற்சிகளுக்கு தாம் அச்சமடையவில்லை என அவர் இன்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.