அனுமதியின்றி Drone கெமராவை பறக்கவிட்ட மூவர் கைது

விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்து அனுமதியின்றி Drone கெமராவை பறக்கவிட்ட மூவர் கைது

by Staff Writer 14-11-2021 | 3:06 PM
Colombo (News 1st) விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் (Drone) கெமராக்கள் மூலம் காணொளி பதிவு செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலாற்படை, பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்தே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விக்டோரியா அணைக்கட்டு, விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் 4 ஆம் காலாற்படை முகாம் ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு காணொளிகளை பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களனி மற்றும் கொத்தட்டுவ பகுதிகளைச் சேர்ந்த 28 வயதான யுவதி, 28 மற்றும் 34 வயதான இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும் தெல்தெனிய நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.