நாட்டின் சில பிரதேசங்களில் மழை

நாட்டின் சில பிரதேசங்களில் மழை

by Staff Writer 14-11-2021 | 3:16 PM
Colombo (News 1st) மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தெற்கு அந்தமான் கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் இது வலுப்பெற்று மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் பலமாக நகர்ந்து வருவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.