வாய்க்காலுக்குள் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

கந்தளாயில் வாய்க்காலுக்குள் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 14-11-2021 | 4:55 PM
Colombo (News 1st) கந்தளாய் - ரஜஎல பகுதியிலுள்ள வாய்க்கால் ஒன்றிற்குள் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். ரஜஎல பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஒருவரே இவ்வாறு வாய்க்காலுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் நீண்ட காலமாக இருதய நோயினால் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.