COVID-19: ஒன்றுகூடலுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி அவசியம்

by Bella Dalima 11-11-2021 | 5:22 PM
Colombo (News 1st) தற்போது வௌியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்குள் உள்வாங்கப்படாத மக்கள் ஒன்றுகூடலுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பூரண அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. மக்கள் ஒன்றுகூடல் மற்றும் அது சார்ந்த செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் இதன் மூலம் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அனுமதி இன்றி மக்கள் ஒன்றுகூடுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குகளுக்கு ஏற்ப சுகாதார அமைச்சரினால் வௌியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் ஒன்றுகூடுவது தொடர்பிலான வரையறைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளார்.