வசந்த முதலிகே உள்ளிட்ட மாணவர் செயற்பாட்டாளர்கள் ஐவருக்கு பிணை

by Bella Dalima 11-11-2021 | 8:40 PM
Colombo (News 1st) நூறு நாட்களுக்கு அதிகமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மாணவர் செயற்பாட்டாளர்கள் 5 பேருக்கு ஹோமாகம மேல் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது. கொத்தலாவல பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.