கொழும்பின் சில பகுதிகளில் 13 ஆம் திகதி நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 13 ஆம் திகதி நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 13 ஆம் திகதி நீர்வெட்டு

எழுத்தாளர் Bella Dalima

11 Nov, 2021 | 4:40 pm

Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் 13 ஆம் திகதி 28 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 13 ஆம் திகதி இரவு 08 மணி தொடக்கம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை 28 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 04, 05, 06, 07, 08 மற்றும் கோட்டை, கடுவல ஆகிய மாநகர சபை பகுதிகளுக்கும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அம்பத்தலேயிலிருந்து கோட்டை வரையான நீர் குழாயில் மேற்கொள்ளப்பட்டவுள்ள திருத்தப் பணிகள் காரணமாகவே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனால் முன்கூட்டியே தேவையான அளவு நீரை சேமித்துக்கொள்ளுமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்