மக்கள் சக்தி நிவாரண பயணம் நாளை (10) ஆரம்பம்

by Staff Writer 09-11-2021 | 10:11 PM
Colombo (News 1st) கடும் மழைனால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அதன் முதற்கட்டமாக மக்கள் சக்தி நிவாரணப் பயணம் நாளைய தினம் (10) புத்தளம் நோக்கி ஆரம்பமாகவுள்ளது. வௌ்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மக்கள் சக்தி நிவாரணப் பயணம் மூலம் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன. வௌ்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள புத்தளம் மாவட்ட மக்களுக்கு நாளை உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன. அதற்கான ஏற்பாடுகள் இன்று (09) நடைபெற்றன.