by Staff Writer 09-11-2021 | 4:19 PM
Colombo (News 1st) வங்காள விரிகுடாவின் தென் கிழக்கு பகுதியில் குறைந்த தாழமுக்க பிரதேசம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் இலங்கையின் வடக்கு கடற்கரை வழியாக தமிழகம் நோக்கி நகரும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் கடற்பிரதேசங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.