முந்தலில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

முந்தல் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 08-11-2021 | 3:50 PM
Colombo (News 1st) புத்தளம் - முந்தல் - குடியிருப்பு கிராமத்திலுள்ள குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (07) மாலை மீன்பிடிக்கச் சென்ற போதே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு பிள்ளைகளின் தந்தையான 45 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன் சடலம் முந்தல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.