இன்று (8) முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

இன்று (08) முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

by Staff Writer 08-11-2021 | 9:57 AM
Colombo (News 1st) இன்று (08) முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தீர்மானித்துள்ளது. டெங்கு அபாய வலயமாக அடையாளங்காணப்பட்டுள்ள 59 சுகாதார வைத்திய பிரிவுகளில் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியே இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. முப்படையினர், மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பொதுசுகாதார வைத்தியர் நிபுணர் தெரிவித்தார் இவ் வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நேற்று (07) வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 22,902 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.