பல பிரதேசங்களில் கன மழை - வளிமண்டலவியல் திணைக்களம்

பல பிரதேசங்களில் கன மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

by Staff Writer 07-11-2021 | 5:03 PM
Colombo (News 1st) ​மேல், சப்ரகமுவ, வட மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, மாத்தளை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை வேளைகளில் அல்லது இரவு வேளைகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பிரதேசங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.