by Staff Writer 07-11-2021 | 10:05 PM
Colombo (News 1st) நிராகரிக்கப்பட்ட சீன சேதனப் பசளை தொகையின் ஏற்றுமதியாளரான Qingdao Seawin சர்ச்சைக்குரிய உர கப்பலின் செயற்பாடுகள் தொடர்பில் திகதி குறிப்பிடப்படாத தௌிவுபடுத்தல் இன்று (07) நியூஸ்பெஸ்ட்டுக்கு கிடைத்துள்ளது.
விஞ்ஞானபூர்வ ஆய்வுகளின் முடிவுகளை மீறி பரிசோதனை அறிக்கைகளை வௌியிடும் தரப்பிற்கும் பரிசோதனை அறிக்கைகள் தொடர்பில் உண்மைக்கு புறம்பான விதத்தில் பிரசாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தமக்கு உரிமை இருப்பதாக Qingdao Seawin விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் உடன்படிக்கைகளுக்கு கௌரமளிக்காமை மற்றும் அங்குள்ள மக்களை தவறான வழியில் நடத்திச் செல்வதனை புரிந்துகொள்ள முடியாதுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் நிறுவனமொன்று இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் அடங்கிய சேதனப் பசளையை ஏற்றுமதி செய்ததாக கூறப்படும் பொய்யான அறிக்கை தொடர்பில் உண்மை தெரியாத பலரையும் நுகர்வோரையும் தவறான திசைக்கு கொண்டுசென்று ஏற்றுமதி தொழில் முயற்சியாளர்களின் வர்த்தகத்திற்கு பாரிய இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதனால், 600 பாகை செல்சியசில் 20 நிமிடங்களுக்கு கிருமி நீக்கம் தாம் செய்வதனால் பின்னர் சேதனப் பசளையில் ஒருபோதும் Erwinia இருக்காது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.