வாகன விபத்துகளில் சிக்கி நால்வர் உயிரிழப்பு

வாகன விபத்துகளில் சிக்கி நால்வர் உயிரிழப்பு

by Staff Writer 06-11-2021 | 11:29 AM
Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை, மொனராகலை, பண்டாரகம மற்றும் பொல்பித்திகம ஆகிய பிரதேசங்களில் குறித்த விபத்துகள் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை - முருகாபுரி பிரதேசத்தில் முச்சக்கரவண்டி மோதிய விபத்தில் 53 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். மொனராகலை - வெல்லவாய வீதியின் கச்சேரி சந்தியில் பஸ் மோதி பெண் ஒருவர் பலியாகியுள்ளார். பண்டாரகம பகுதியில் முச்சக்கரவண்டி மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, பொல்பித்திகம - கலுகல்ல பாலத்தின் அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று  விபத்துக்குள்ளானதில் 34 வயதான ஒருவர் பலியாகியுள்ளார்.