சுழிபுரத்தில் நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

யாழ். சுழிபுரத்தில் நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

by Staff Writer 06-11-2021 | 10:30 PM
Colombo (News 1st) யாழ். சுழிபுரத்தில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நீரில் மூழ்கிய இளைஞர் காப்பாற்றப்பட்டு மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன்பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மூளாய் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.