இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பியது

இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பியது

by Staff Writer 06-11-2021 | 12:17 PM
Colombo (News 1st) உலகக் கிண்ண 20 க்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்குபற்றுவதற்காக துபாய் நோக்கிச் சென்றிருந்த இலங்கை அணி, இன்று (06) அதிகாலை நாடு திரும்பியது. இன்று (06) அதிகாலை ஒரு மணியளவில் அவர்கள் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேர அதிகாரி தெரிவித்தார். இம் முறை போட்டியில் தகுதிகாண் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை அணி, Super 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. Super 12 சுற்றில் பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டிகளில் இலங்கை அணி விசேட வெற்றியை பதிவு செய்தது.