English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
06 Nov, 2021 | 7:26 pm
Colombo (News 1st) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கடந்த 02 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ் – முஸ்லிம் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடலில் இலங்கை தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையிலேயே, நேற்று (05) இரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது பேசியதாகவும் இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து இடம்பெறும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.
சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஒற்றுமையாக கையாள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அவர் கூறினார்.
அனைத்து மக்களும் தங்களது இறைமையை பயன்படுத்தக்கூடிய வகையில், அதிகாரங்கள் பகிந்தளிக்கப்பட்டு அவர்கள் ஒற்றுமையாக ஒருமித்து வாழ வேண்டும் என என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தை அமைந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
பேச்சுவார்த்தை மிகவும் திருப்திகரமாக அமைந்ததாகவும் இந்த செயற்பாடுகள் தொடரும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நியூஸ்பெஸ்ட்டுக்கு மேலும் தெரிவித்தார்.
17 Jul, 2022 | 02:41 PM
18 Feb, 2022 | 08:31 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS