மேலும் 21 கொரோனா மரணங்கள் பதிவு

மேலும் 21 கொரோனா மரணங்கள்; இதுவரை 13,791 பேர் உயிரிழப்பு

by Bella Dalima 04-11-2021 | 1:21 PM
Colombo (News 1st) ​மேலும் 21 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 15 பெண்களும் 06 ஆண்களும் அடங்குகின்றனர். இதற்கிணங்க, உயிரிழந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 13,791 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நேற்று 474 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5,42,686 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 340 கொரோனா நோயாளர்கள் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதற்கிணங்க, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,13,880 ஆக அதிகரித்துள்ளது. COVID-19 தொற்றுக்குள்ளாகிய 15,036 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.