கொழும்பு பல்கலைக்கழக வேந்தராக ஆனந்த தேரர் நியமனம்

கொழும்பு பல்கலைக்கழக வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமனம்

by Bella Dalima 02-11-2021 | 6:58 PM
Colombo (News 1st) முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் நவம்பர் 17 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாரஹென்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதியாகவுள்ள முருத்தெட்டுவே ஆனந்த தேரர், அரச ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டு வருகிறார். இதுவரையில் முன்னாள் கொழும்பு பேராயர் பேரருட்திரு கலாநிதி ஒஸ்வல்ட் கோமஸ் ஆண்டகை கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக கடமையாற்றியிருந்தார்.