கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 13,770 ஆக அதிகரிப்பு

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 13,770 ஆக அதிகரிப்பு

by Bella Dalima 02-11-2021 | 2:40 PM
Colombo (News 1st) 17 கொரோனா மரணங்கள் நேற்று (01) அறிவிக்கப்பட்டன. இவர்களில் 11 ஆண்களும் 06 பெண்களும் அடங்குகின்றனர். அத்துடன், 11 பேர், 60 வயதிற்கும் மேற்பட்டவர்களென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனிடையே நேற்று 408 பேர் COVID தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இந்நிலையில், இன்று (02) மேலும் 10 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 5, 41,649 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 13,770 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

ஏனைய செய்திகள்