மாகாண பயண தடை நீக்கம்

மாகாணங்களுக்கு இடையிலான பயண தடை நீக்கம்

by Staff Writer 31-10-2021 | 6:43 AM
Colombo (News 1st) மாகாணங்களுக்கு இடையிலாக பயணத் தடை இன்று (31) அதிகாலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களின் பிரகாரம் மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது. பயணத் தடை நீக்கப்பட்டாலும் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறும் வீட்டிலிருந்து வெளியேறுவதனை இயலுமானவரை வரையறுக்கும்படியும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மக்களை அறிவுறுத்தியுள்ளார்.