கம்பஹாவின் சில பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு 

கம்பஹாவின் சில பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு 

by Staff Writer 31-10-2021 | 4:21 PM
Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (01) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கேரகல, தெமாலகம, கந்துபொட, தெக்கட்டன, பெலஹெல, இந்தொலமுல்ல, தொம்பே, நாரங்வல, வெலிவேரிய மற்றும் ரத்துபஸ்வெல ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நீர் விநியோகக் கட்டமைப்பில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.